வெற்றுக்கைகளால் நாக பாம்பைப் பிடித்து, பாம்பைக் காப்பாற்ற முயன்றவர் பாம்பு தீண்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புத்தூர், சிவன் கோயில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் சர்மா என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு, இவரது வீட்டின் முற்றத்தில் காணப்பட்ட வலைகளுக்குள் நாக பாம்பு ஒன்று சிக்கி தவித்துக்கொண்டிருந்ததை அவதானித்து, வலைகளுக்குள் சிக்கி இருந்த நாக பாம்பை வெற்றுக்கைகளால் பிடித்துக் காப்பாற்ற முற்பட்ட வேளை பாம்பு அவரைத் தீண்டியுள்ளது.
அதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.