கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளளனர்.
குறித்த பெண்கள் 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டு பெட்டிகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.