அமெரிக்காவில் 282 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானம் திடீரென தீப்பரவல் சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது
மத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து, அட்லாண்டாவுக்கு புறப்படவிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானதிலேயே தீப்பரவல் ஏற்பட்டது.
அதன்போது, விமானத்தில் 282 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் இருந்தனர்.
எனினும், துரிதமாக இறங்கிய மீட்பு படையினர், பயணிகளையும், பயணிகளையும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.