சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்றையதினம் (15) மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த நபர் வாடகைக்கு சிகை அலங்கார கடையை நடத்தி வந்தவர் என்றும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த நபர் சிகை அலங்கார கடை வேலைகளை முடித்து கடையறைக்குள் இரவு தூக்கத்தை கழிப்பவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.