யாருக்கும் தெரியாத முக்கிய இரகசியத்தை நாளை வெளியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில திட்டமிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது.
அவற்றில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவை தொடர்பில் முக்கிய தகவல்களை அவர் வெளியிடவுள்ளார்.
அதற்கமைய, நாளை காலை ஊடகவியலாளர்களை தங்கள் கட்சி அலுவலகத்திற்கு ஏற்கனவே அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.