அளுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குருந்துவத்த, தர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக இறந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று தெரியவந்ததுள்ளது.
கொலைக்குப் பிறகு, இறந்தவரின் கணவர் (வயது 45) கொலை செய்யப் பயன்படுத்திய வாளுடன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.