வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார் எனப் பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர்.
வவுனியா நகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இந்தப் பொலிஸ் உத்தியோகத்தர் பாரவூர்தி ஒன்றில் மோதியதில் விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் லக்ஸ்மன் பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே சாவடைந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பான விசாரணையினை வவுனியா பொலிஸார் மற்றும் திடீர்மரண விசாரணை அதிகாரி ஹரிபிரசாத் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.