அநுராதபுரம் பசவக்குளம் ஏரியில் நேற்று மதியம் குளித்தபோது மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உட்பட ஐந்து பேர் காயமடைந்து அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அநுராதபுரம் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
யாத்திரைக்காக அநுராதபுரத்திற்கு வந்திருந்த குழுவினரே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 24, 30, 38 மற்றும் 48 வயதுடைய நபர்கள் பயாகல, வல்பொல மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
மின்னல் தாக்கியபோது ஒருவர் டெக்கில் தொலைபேசி அழைப்பில் இருந்தார் எனக் கூறப்படுகின்றது.
குளிக்கும் பகுதிக்கு அருகில் இருந்த ஒரு பெரிய மரக் கிளை மின்னல் முறிந்து விழுந்துள்ளது. மரம் வேர் வரையில் சேதமடைந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 48 மற்றும் 24 வயதுடைய இருவரும் தந்தை மற்றும் மகன் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.