களுத்துறை மத்துகம - தொலஹேன பகுதியில் இளம் பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அங்கலவத்தை, மேர்வின் சமரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டவர் ஆவார்.
காதல் உறவால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கின்றார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.