சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு நேற்று கறுப்புச் சட்டை அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சென்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக்கு நேற்று திங்கள் கிழமை சென்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் டாஸ்மாக் ஊழலை குறிப்பிடும் வகையில் ' யார் அந்த தியாகி ' என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர். தொடர்ந்து டாஸ்மாக் ஊழலை பற்றி விவாதிக்குமாறு பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பேட்ஜ் அணிந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் வெளியேற்றி, முதல்வர் வேண்டுகோளுக்கு இணங்க சட்டப்பேரவையில் இருந்து ஒரு நாள் மட்டும் நீக்கம் செய்தார்.
இதையொட்டி நேற்று சட்டப்பேரவைக்கு வந்த எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள், சட்டப்பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கறுப்புச் சட்டை அணிந்து வருகை தந்து கவனம் ஈர்த்தனர்.
இதற்கிடையில் அ.தி.மு.கவினர் கறுப்புச் சட்டை அணிந்து வந்ததை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், ‘எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவி உடையில் பேரவைக்கு வராதது மகிழ்ச்சி’ என்று கூறினார்.