ஸ்ரீ தலதா மாளிகையின் பல் நினைவுச்சின்ன கண்காட்சிக்காக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி நகரிலும் அதை அண்டிய பகுதிகளிலும் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று மத்திய மாகாண தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு வசதிகளை வழங்கப்படும் மேலும் 37 பாடசாலைகளை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.