அனைத்து தபால் வாக்குச் சீட்டுகளும் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதுவரை 227 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 112 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச் சீட்டுகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார்.