117 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருளை லொறியில் கடத்திச்சென்ற இருவரை கைது செய்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று அதிகாலை குடாவெல்ல மீன்பிடி துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் தங்காலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 34 மற்றும் 35 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து, மீன்களை ஏற்றிச் செல்லும் குளிர்சாதன வசதிகள் அடங்கிய லொறியில் குறித்த போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.