கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த இரட்டை கொலை சம்பவத்தின் கொலையாளி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதலில், ஜஸ்வெல் பிரவுன் (Jazwell Brown வயது 49) என்ற நபர் இரண்டு பெண்களை கத்தியால் குத்தி கொலை செய்ததையும், இருவரை கொலை செய்ய முயன்றதையும் ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவங்கள் மில்டன் கெய்ன்ஸ் (Milton Keynes), பிளெட்ச்லியில் (Bletchley) உள்ள சாண்டா குரூஸ் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் டிசம்பர் 25 ஆம் திகதி அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. சம்பவம் நிகழ்ந்த அன்று அவசர சேவைகள் மாலை 6:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், அங்கு பியர்சன் மற்றும் கிராண்ட் ஆகியோர் இறந்த நிலையில் காணப்பட்டனர். இளம் சிறுவன் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நீதிமன்ற விசாரணையின் போது ஜோன் பியர்சன் (வயது 38) மற்றும் தியோனா கிராண்ட் (வயது 24) ஆகியோரை கொலை செய்ததை லுட்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த ஒரு சுருக்கமான விசாரணையின் போது பிரவுன் ஒப்புக்கொண்டார். மேலும், பிராட்லி லாட்டர் (வயது 29) மற்றும் ஒரு இளம் சிறுவனை கொலை செய்ய முயன்றதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அத்துடன் மேலும், பிளெட்ச்லியைச் சேர்ந்த பிரவுன், பொது இடத்தில் கத்தி வைத்திருந்ததாகவும், பாதுகாக்கப்பட்ட விலங்கான ஸ்டாஃபோர்ட்ஷயர் புல் டெரியருக்கு தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டார்.