தகாத உறவால் வந்த வினை-கணவனை துப்பட்டாவால் இறுக்கி துடிதுடிக்க கொன்ற மனைவி..!

 

அரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டம் பிரேம் நகரை சேர்ந்தவர் ரவீனா (32 வயது). இவரது கணவர் பிரவீன் (35 வயது). இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். ரவீனாவுக்கு சுரேஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 


ரவீனா - சுரேஷ் இருவரும் இணைத்து ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்கி யூடியூபில் பதிவிடத் தொடங்கியுள்ளனர். 

கணவன் பிரவீன் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி ரவீனா சுரேஷுடன் இணைந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக யூடியூபில் இயங்கி வந்துள்ளார். அவர்களின் சேனல் 34,000 பின்தொடர்பவர்களுடன் பிரபலம் அடைந்துள்ளது. 

இதற்கிடையே கணவன் பிரவீன், கடந்த மார்ச் 25ஆம் திகதி ரவீனா சுரேஷுடன் அந்தரங்கமான நிலையில் இருப்பதை கண்டுள்ளார். இதனால் இருவருடனும் பிரவீன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரவீனா மற்றும் சுரேஷ் பிரவீனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். 

பின்னர் மோட்டார் சைக்கிளில் உடலை கொண்டு சென்று, 6 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வடிகானில் வீசியுள்ளனர். பின்னர் சடலம் மார்ச் 28ஆம் திகதி அழுகிய நிலையில் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது. 

அதன்பின் பொலிஸார் சிசிடிவியை ஆராய்ந்ததில் உண்மை வெளிப்பட்டது. இதன்பின் நடந்த விசாரணைக்குப் பின் இருவரும் தற்போது கைது செய்துள்ளனர். 

பிரவீன் - ரவீனாவின் 6 வயது மகன் அவனது தாத்தாவின் பராமரிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.