கம்பஹா மினுவாங்கொடை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தேவல்பொல பகுதியில் (13) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இறந்தவர் தேவல்பொல பகுதியினை சேர்ந்த 73 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சந்தேக நபரின் வீட்டிற்குச் செல்வது தொடர்பான தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைக்குப் பிறகு சந்தேக நபர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.