இந்தியாவில், ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒருவர் வீதி விபத்தினால் உயிரிழகின்றார் என அண்மையத் தரவுகளில் தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மாத்திரம் வீதி விபத்தினால் 172,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி ஆண்டில் 10,000 சிறுவர்கள் பலியாகியுள்ளனர் என கூறப்படுகிறது.
அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமையே அதிக விபத்துக்கள் சம்பவிக்க காரணம் என குறிப்பிடப்படுகிறது.
இந்தியா, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 வீதத்தை விபத்துக்களுக்காக செலவிடுகிறது.