கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கையின் சனத்தொகையில் பாரிய அளவில் வீழ்ச்சி காணப்படும். இதில் அதிகமானவர்கள் தமிழர்களே வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.