மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் கடை ஒன்றில் வியாழக்கிழமை (17) மாலை ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக கடை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
கடைக்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் வண்டிகளும் முற்றாக எரிந்துள்ளதாக தெரிய வருகிறது. கடையில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.