தயாரிப்பாளரும், நடிகருமான கலைப்புலி ஜி சேகரன் (73) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 'யார்?', 'ஜமீன் கோட்டை' போன்ற படங்களை தயாரித்தவர் கலைப்புலி ஜி சேகரன். சில படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார்.
சினிமா திரையுலகில்
தனது பயணத்தைத் தொடங்கியவர் ஜி.சேகரன். பின்னர் எஸ். தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராக ஆனார். 1985 ஆம் ஆண்டு வெளியான 'யார்' படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
கலைப்புலி ஜி சேகரன், 1988 ஆம் ஆண்டு 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்' படத்தை இயக்கினார். 'காவல் பூனைகள்', 'உளவாளி' என அடுத்தடுத்து சில படங்களை இயக்கினார். விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார் கலைப்புலி ஜி.சேகரன்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட கலைப்புலி ஜி. சேகரன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை ராயபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. கலைப்புலி ஜி.சேகரன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.