கொழும்பு விடுதி ஒன்றில் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த ஜோடி-திடீரன உள்நுழைந்த மாணவி உட்பட 5 அழகிகள் செய்த பயங்கர சம்பவம்..!

 

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள விடுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த கும்பல் ஒன்று அங்கு தங்கியிருந்த திருமணமாகாத தம்பதியை தாக்கியுள்ளனர்.

அத்துடன் அவர்களை கடத்தி, அவர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட பெண்களில் 15 வயதுடைய மாணவி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஏனைய சந்தேக நபர்கள் 33, 52, 54 மற்றும் 25 வயதுடைய பெண்கள் என்றும் அதே பகுதியைச்  சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸ் விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் விடுதியில் தங்கியிருந்த ஆணின் குடும்பத்தின் உறவினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பாக வழங்கப்பட்ட மேலதிக தகவலுக்கமைய, திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டுள்ள தம்பதி விடுதியில் தங்கியிருப்பதை அறிந்த பெண்கள், விடுதிக்குச் சென்று, அவர்களை தாக்கியுள்னளர்.


அத்துடன் அவர்களை கடத்திச் சென்று அவர்களிடம் கொள்ளையடித்த பின்னர் விட்டுச் சென்றுள்ளனர்.


இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான தம்பதி செய்த முறைப்பாட்டிற்கமைய, 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை கடலோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.