கொங்கோவில் 400 பயணிகளுடன் பயணித்த படகில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் சுமார் 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி படகில் உணவு தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோதே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சம்பவத்தின் போது படகில் சுமார் 400 பேர் காணப்பட்டதுடன், அதில் 100 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல்போன ஏனைய பயணிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.