பசுவொன்று 3 கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ்.வடமராட்சியில் பதிவாகியுள்ளது.
வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு 3 கன்றுகளை ஈன்றுள்ளது.
பொதுவாக பசுக்கள் ஒன்று அல்லது இரண்டு கன்றுகளை ஈனும். எனினும் ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது.
கன்றுகளை ஈன்ற பசுவையும் கன்றுகளையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.