ஏமன் எரிபொருள் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், 38 பேர் உயிரிழந்தோடு, 102 பேர் பலத்த காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஹமாஸ் படையினருக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகிறது. செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில், அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதனால், ஏமனில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளில், அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், ஏமன் எரிபொருள் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், 38 பேர் உயிரிழந்தனர். 102 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எரிபொருள் விநியோகத்தை துண்டிப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும், அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.