இலங்கைத் தேர்தல் ஆணையம் வரவிருக்கும் 2025 உள்ளாட்சித் தேர்தல்களில் அஞ்சல் வாக்களிப்புக்கான திருத்தப்பட்ட திகதிகளை அறிவித்துள்ளது.
அதன்படி, அஞ்சல் வாக்களிப்பு இப்போது 2025 ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும்.
முன்னர் இது ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அந்த மூன்று தினங்களிலும் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என ஆணைக்குழு முன்னர் தெரிவித்திருந்தது.
அது இப்போது ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.