இந்தியாவின் தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் (22) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர்.
மேலும் சில சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்தன.
கிடைக்கப்பெற்ற தகவலின் படி, பஹல்காமில் உள்ள வீதிக்கு அப்பாற்பட்ட புல்வெளியான பைசரன் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.