இந்தியா முழுவதும் பச்சிளம் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த 25 பேர் கொண்ட குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டு அவற்றை தெலுங்கானா மாநிலத்தில் விற்பதாக தெலுங்கானா பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் மூலம் பல இலட்சம் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த கைது நடவடிக்கையின் போது பிறந்து ஒரு மாதமான 6 பெண் குழந்தைகள், 6 மாதம் கொண்ட 4 ஆண் குழந்தைகள் என மொத்தம் 10 குழந்தைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
தவறான உறவு முறையில் பிறந்த குழந்தைகள் மற்றும் மருத்துவமனைகளில் திருடப்பட்ட குழந்தைகளே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சிவனை பாதுகாக்கும் நாகம் தவறாமல் பாருங்கள் நல்லதே நடக்கும்.