புத்தளம் சிலாபம் பிரதான வீதியில் மதுரங்குளி பிரதேசத்தில், லொறியும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்தவர்களில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவ் விபத்து நேற்றையதினம்(28) இடம்பெற்றது.
இதனையடுத்து அவர்கள் உடனடியாக புத்தளம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.