வெள்ளம் காணரமாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. வவுனியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் அதிகளவில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் கடவுச்சீட்டு விநியோக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் அலுவலகத்தில் கடமையாற்றுவோர் வெள்ளத்திற்குள் நின்று தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நீரை வெளியேற்றுவதற்கு அலுவலக உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.