வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதுடன்
மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் , ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றானது மணித்தியாலத்திற்கு 30 -40 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.