பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்
வலயக் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொழும்பு வடக்கு மோட்டார் சைக்கிள் குழுவினர் வேனை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டில் வேனில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வேனை கிரேன்பாஸ் பொலிஸ் பிரிவில் சோதனைக்காக நிறுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் அது தொடர்ந்து சென்றதால் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.