காலி சிறைச்சாலையில் இன்று பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மோதலாக மாறியதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறைச்சாலைக்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் அழைக்கப்பட்டுள்ளனர்.