எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் நேற்று(13) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு ஆசிரியர்களின் போராட்டத்தினால் பெருமளவிலான ஆசிரியர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்தது. அதன் பலனாக மூன்றில் இரண்டு அதிகாரம் கொண்ட அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட்டு தற்போதைய ஜனரஞ்சக அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.