யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.ரயிலின் ஒரு பெட்டி இன்று மாலை 4 மணியளவில் தடம் புரண்டுள்ளது. நிலைமையை சீர்செய்யும் பணிகளில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தின் போது பயணிகள் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை.
இதனிடையே ரயில்பெட்டி தடம்புரண்டதால் அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறைக்கான மாலை நேர ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.