கட்டுநாயக்க விமான நிலையத்தின் பறவைகள். விலங்குகள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறவைகளைக் கலைக்க அனுப்பிய பட்டாசு அவர்களது வாகனத்திற்குள்ளேயே விழுந்து வெடித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 3 அதிகாரிகள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமானங்களுக்கு இடையூறாக வானத்தில் அதிகளவில் பறவைகள் பறப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய பறவைகளை விரட்டுவதற்காக பறவைகள். விலங்குகள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விரைந்து பட்டாசை அனுப்பியுள்ளனர். அந்த பட்டாசுகள் தவறுதலாக திரும்பி அதிகாரிகளின் வாகனத்திலேயே விழுந்துள்ளன. ஏற்கனவே வாகனத்தில் காணப்பட்ட பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில் வாகனம் பாரிய சேதமடைந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.