யாழில் இன்று(12) ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு புரையேறியதால் உயிரிழந்துள்ளது.
சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தை நேற்று (11) கச்சான் சாப்பிட்டவேளை புரையேறியது.
பின்னர் குழந்தை உறங்கி விட்டது. உறங்கிய குழந்தை நேற்று இரவு எழுந்து வாந்தி எடுத்துவிட்டு அழுதவேளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் இன்று (12) குழந்தை உயிரிழந்தது.
சுவாசக் குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது