மாத்தளை சிறைச்சாலையில் மரக்கிளை முறிந்த விழுந்த சம்பவத்தில் மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.
மாத்தளை சிறைச்சாலையில் மரக்கிளை முறிந்த விழுந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த கைதி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் மரம் முறிந்த விழுந்த சம்பவத்தில் ஊயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
மாத்தளை சிறைச்சாலையில் கடந்த முதலாம் திகதி மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்து அனர்த்தம் இடம்பெற்றது.
இதில் சிறைச்சாலையில் ஜீ மற்றும் எப்ஃ ஆகிய 2 விடுதிகள் சேதமடைந்த நிலையில் விடுதியிலிருந்த கைதி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே வைத்தியசாலையிலிருந்து 7 பேர் சிகிச்சைகளின் பின்னர் சிறைச்சாலைலைக்கு திரும்பியுள்ளதுடன் ஏனைய மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த அனர்த்தத்தைத் தொடர்ந்து கைதிகளை மாத்தறை சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று நடவடிக்கை எடுத்திருந்தனர்.