இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் இடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் இருந்த எரிவாயுக் கலன் வெடித்ததால் தொடர்ந்து பல கூடாரங்களுக்குத் தீ பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால்இ அங்கு பதற்றநிலை உருவானது.இந்த விபத்தால் கூடாரங்களில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் பல எரிந்து சாம்பலாகின. தீ பரவுவதாகத் தகவல் கிடைத்தவுடன் ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அந்தப் பகுதியில் உள்ள சாஸ்திரி பாலம்இ ரயில்வே பாலம் இடையேயுள்ள பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அருகில் உள்ள கூடாரங்களில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 20 முதல் 25 கூடாரங்கள் தீக்கிரையாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து வருவதால் தீ மிகவும் வேகமாகப் பரவி வருகிறது.அப்பகுதியில் இருக்கும் மக்களைக் கட்டுப்படுத்திப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்ல காவல்துறையினரும் பேரிடர் மீட்புப் படையினரும் நடவடிக்கை மேற்கொண்டனர்.இந்த தீ விபத்தில் உயிரிழப்பு சம்பவங்களோ யாருக்கும் காயம் உள்பட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.