ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு


 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.முதலாம் வாசிப்பு இன்று இடம்பெறுவதுடன் இரண்டாம் வாசிப்பு எனப்படும் பாதீட்டு உரை எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

தொடர்ந்து இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 முதல் பெப்பரவரி 25 வரை நடைபெறவுள்ளது. அத்துடன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை நடைபெறவுள்ளது. ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை நடைபெறவுள்ளதுடன் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி மாலை நடைபெறவுள்ளது. 


கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.