அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 20 வயதான இந்திய வம்சாவளி இளைஞனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2023 ஆம் ஆண்டு மே மாதம் 22 அம் திகதி இரவு 9:35 க்கு வாகனம் ஒன்றை வெள்ளை மாளிகை நோக்கி செலுத்தி வெள்ளை மாளிகை மற்றும் ஜனாதிபதி பூங்காவைப் பாதுகாக்கும் தடுப்புகள் மீது மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் தெரிவித்த வாக்குமூலத்திற்கு அமைவாக தாக்குதலுக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.குறித்த இளைஞன் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்தார் என்பதுடன் கிரீன் கார்டுடன் அமெரிக்காவில் சட்டப்பூர்வமான நிரந்தர குடியிருப்பாளராக இருந்தார்.