டுபாய் கார்ப் பந்தயத்திலிருந்து நடிகர் அஜித் குமார் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அவருக்கு பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரது அணி தொடர்ந்தும் பந்தயத்தில் பங்கேற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் கார் பந்தயப்பயிற்சியின்போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் அஜித்குமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.