முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் இன்று யானை துரத்தியதில் மூவர் காயமடைந்து முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் தெற்கு பகுதியில் யானை துரத்தியதில் கண்ணிவெடி அகற்றும் மூன்று பெண் பணியாளர்கள் காயமடைந்தனர்.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் தெற்கு கிராமேசேவகர் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தியில் இருந்து வெலிஓயா செல்லும் பாதை பகுதியில் காட்டுப்பகுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு பணியிலிருந்த போது திடீரென வந்த யானை அவர்களைத் துரத்தியுள்ளது. பணியாளர்கள் பயந்து ஓடிய நிலையில் மூவர் காயமடைந்ததுடன், மூவரும் மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.