மன்னாரில் முன் னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேஎன நேற்று நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் மன்னார் ரயில் போக்குவரத்து சேவைகள், திண்மக் கழிவு முiகாமைத்துவத்திலுள்ள இடர்பாடுகள், காற்றாலை மின் உற்பத்தித் திட்டம், மற்றும் கனிய மணல் அகழ்வு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் மக்கள் விரும்பாத செயற்பாட்டினை தொடர்ந்ததும் முன்னெடுக்க முடியாது என மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க கூட்டத்தின்போது தெரிவித்தார்.
இதனால் இந்த திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன் எதிர்வருகின்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் குறித்த விடயங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் ஏற்பாட்டில் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன், துரைராசா ரவிகரன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம மட்ட பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் சிவில் சமூகத் தலைவர்கள், மதத் தலைவர் கலந்து கொண்டனர்.