23.01.2025 வியாழக்கிழமை இரவு 7.00 மணி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை முதல் படிப்படியாக மழை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 28.01.2025 வரை மழை மிகக் குறைவான வானிலை நிலவும்.
ஆயினும் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே அறுவடையை மேற்கொள்ளவுள்ள விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டு தமது அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.
விவசாயிகள் சிறிய அளவிலான மழையை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களோடு அறுவடை செயற்பாடுகளை மேற்கொள்வது உசிதமானது.
- நாகமுத்து பிரதீபராஜா -