நாட்டின் கிழக்கு, வட மத்திய , ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வட மாகாணத்திலும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வட மத்திய, கிழக்கு, மற்றும் வட மேல் மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மேல். சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பனியுடனான நிலை அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.