கிளிநொச்சி ஏ 9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி ஏ 9வீதி கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றது. இன்று காலை 5.45 அளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பருதித்தித்துறை - திருகோணமலை இடையே சேவையிலீடுபடும் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி, கணேசபுரத்தைச் சேர்ந்த குமரேஸ்வரன் யோகலிங்கம் என்ற 73 வயதானர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார.;விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.