கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி நபர் ஒருவர் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை இவரை பற்றி மேலதிக தகவல்கள் தெரிந்தால் உடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களை பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.