மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு பகுதியில் இளம் பெண் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரயில் தண்டவாளத்திற்கு அருகில் அவரது சடலம் அவதானிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மன்னார், ஜீவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக் காட்டில் உள்ள உறவினர் வீட்டில் அவர் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.