புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10 ஆம் கட்டை பகுதியில் வீட்டுதளபாடங்கள், மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பட்டிருந்தன. இந்த திருட்டு சம்பவம் தாெடர்பாக வீட்டு உரிமையாளர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் போடப்பட்ட முறைப்பாட்டுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இந்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் திருடிய பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட இருக்கின்றார்கள். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.