சீனாவில் தற்போது பரவி வருகின்ற human Metapneumovirus எனப்படும் எச்எம்பிவி ரைவரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இலங்கையில் கடந்த வருடம் அடையாளம் காணப்பட்டதாகவும் வைத்திய ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இது சாராதரண வைரஸ் தொற்று தான் எனவும் இதனால் அச்சமடையத் தேவையில்லை எனவும் கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் தொற்றுநோயியல் வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளானவர்களுக்கு இருமல்இ சழிஇ காய்ச்சல்இ போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் மிக அரிதாக சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.
தொற்றுக்குள்ளானவர்கள் விசேட சிகிச்சை முறைகளின்றி மிகச் சில நாட்களில் குணமடைவதாகவும் அவர் கூறினார். இதனால் யாரும் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கைகளை அடிக்கடி கழுவுதல்இ கழுவாத நிலையில் கைகளினால் முகத்தைத் தொடுவதைத் தவிர்த்தல்இ சன நெரிசலான பகுதிகளுக்குச் செல்லும் போது முகக்கவசங்களை அணிதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிகுறிகள் அதிகளவில் தென்படும் பட்சத்தில் மருத்துவ உதவிகளைப் பெறுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.